430குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா
      கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியாக ஆதி அஞ் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன்தமர்கள்
      நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது
அன்று அங்கு நீ என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே            (9)