432வாக்குத் தூய்மை இலாமையினாலே
      மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது
      நான் அது அஞ்சுவன் என்வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று
      முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்
      காரணா கருளக் கொடியானே             (1)