433சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்
      சங்கு சக்கரம் ஏந்து கையானே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல்
      பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்
      வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்
      ஊழி ஏழ் உலகு உண்டு உமிழ்ந்தானே             (2)