437கண்ணா நான்முகனைப் படைத்தானே
      காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
      ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
      வேத நாள்மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில்
      அன்று எனக்கு அவை பட்டினி நாளே            (6)