முகப்பு
தொடக்கம்
439
வண்ண மால் வரையே குடையாக
மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே
காரணா களிறு அட்ட பிரானே
எண்ணுவார் இடரைக் களைவானே
ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும்
நன்மையே அருள்செய் எம்பிரானே (8)