442நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்
      எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்
      காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து
      வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பு- அணையோடும்
      பண்டு அன்று பட்டினம் காப்பே            (1)