443சித்திரகுத்தன் எழுத்தால்
      தென்புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றித்
      தூதுவர் ஓடி ஒளித்தார்
முத்துத் திரைக் கடற் சேர்ப்பன்
      மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன்
      பண்டு அன்று பட்டினம் காப்பே            (2)