445மங்கிய வல்வினை நோய்காள்
      உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின்
      எளிது அன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரான் அவன் எம்மான்
      சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்யப் போமின்
      பண்டு அன்று பட்டினம் காப்பே             (4)