முகப்பு
தொடக்கம்
447
உற்ற உறுபிணி நோய்காள்
உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம்
ஆழ்வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின்
பண்டு அன்று பட்டினம் காப்பே (6)