முகப்பு
தொடக்கம்
451
அரவத்து அமளியினோடும்
அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப்
பள்ளி கொள்கின்ற பிரானைப்
பரவுகின்றான் விட்டுசித்தன்
பட்டினம் காவற் பொருட்டே (10)