452துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த
      வலையை அறப் பறித்துப்
புக்கினிற் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப்
      போக விடுவதுண்டே?
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத
      இழந்தவள் தன்வயிற்றிற்
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்             (1)