முகப்பு
தொடக்கம்
452
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த
வலையை அறப் பறித்துப்
புக்கினிற் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப்
போக விடுவதுண்டே?
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத
இழந்தவள் தன்வயிற்றிற்
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (1)