முகப்பு
தொடக்கம்
456
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல்
சோர்ந்து நடுங்கிக் குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா என
தோள்களும் வீழ்வு ஒழியா
மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை
வாழத் தலைப்பெய்திட்டேன்
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (5)