458அக்கரை என்னும் அனத்தக் கடலுள்
      அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்
      சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக்கைகளும் கண்களும்
      பீதக ஆடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்             (7)