முகப்பு
தொடக்கம்
459
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்
இன்றொடு நாளை என்றே
இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன்
இனி உன்னைப் போகலொட்டேன்
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர்
நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்தம் நின்பாலது அறிதி அன்றே திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (8)