459எத்தனை காலமும் எத்தனை ஊழியும்
      இன்றொடு நாளை என்றே
இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன்
      இனி உன்னைப் போகலொட்டேன்
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர்
      நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்தம் நின்பாலது அறிதி அன்றே திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்             (8)