462சென்னி ஓங்கு தண் திருவேங்
      கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ
      தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன்
      சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
      இனி என் திருக்குறிப்பே?               (1)