முகப்பு
தொடக்கம்
464
எம்மனா என் குலதெய்வமே
என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்
உலகினில் ஆர் பெறுவார்?
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்
நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
சும்மெனாதே கைவிட்டு ஓடித்
தூறுகள் பாய்ந்தனவே (3)