468பருப்பதத்துக் கயல் பொறித்த
      பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என்
      சென்னியின் மேல் பொறித்தாய்
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய்
      என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை
      உனக்கு உரித்து ஆக்கினையே             (7)