முகப்பு
தொடக்கம்
470
பனிக் கடலில் பள்ளி- கோளைப்
பழகவிட்டு ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல
மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே
தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை
உனக்கு உரித்து ஆக்கினையே (9)