472வேயர் தங்கள் குலத்து உதித்த
      விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக்
      கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயர்-ஏற்றை அமரர் கோவை
      அந்தணர்தம் அமுதத்தினைச்
சாயை போலப் பாட வல்லார்
      தாமும் அணுக்கர்களே             (11)