476ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
  ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
  பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
  தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
      மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்             (4)