478 | புள்ளும் சிலம்பின காண் புள்-அரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேர்-அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய் (6) |
|