483 | கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச் சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய் (11) |
|