486 | உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர் தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய் (14) |
|