490 | உந்து மத களிற்றன் ஓடாத தோள்-வலியன் நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலீ கடை திறவாய் வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தர்மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண் பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய் (18) |
|