491 | குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக் கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய் மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால் தத்துவம் அன்று தகவு-ஏலோர் எம்பாவாய் (19) |
|