493 | ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து-ஏலோர் எம்பாவாய் (21) |
|