499கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
      பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
      சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்
  ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
      கூடியிருந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்             (27)