500 | கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே இறைவா நீ தாராய் பறை- ஏலோர் எம்பாவாய் (28) |
|