502 | வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள்-திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி அங்குப் பறைகொண்ட-ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் (30) |
|