513நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
      நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால்
      எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்
      குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள்
      சிற்றில் வந்து சிதையேலே             (1)