முகப்பு
தொடக்கம்
513
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்
குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே (1)