முகப்பு
தொடக்கம்
519
பேதம் நன்கு அறிவார்களோடு இவை
பேசினால் பெரிது இன் சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைக
ளோமை நீ நலிந்து என் பயன்?
ஓத மா கடல்வண்ணா உன் மண
வாட்டிமாரொடு சூளறும்
சேது-பந்தம் திருத்தினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே (7)