520வட்ட வாய்ச் சிறுதூதையோடு
      சிறுசுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச்
      சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்
      சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தால் இன்னாமை
      அறிதியே கடல்வண்ணனே             (8)