523கோழி அழைப்பதன் முன்னம்
      குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான்
      அரவு-அணைமேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம்
      இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம்
      துகிலைப் பணித்தருளாயே             (1)