524இது என் புகுந்தது இங்கு? அந்தோ
      இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?
மதுவின் துழாய் முடி மாலே
      மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம்
      வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண்டு அரவில் நடித்தாய்
      குருந்திடைக் கூறை பணியாய்             (2)