527காலைக் கதுவிடுகின்ற
      கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்கள்
      ஓட்டில் என்ன விளையாட்டோ?
கோலச் சிற்றாடை பலவும்
      கொண்டு நீ ஏறியிராதே
கோலம் கரிய பிரானே
      குருந்திடைக் கூறை பணியாய்             (5)