528தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்
      தாள்கள் எம் காலைக் கதுவ
விடத் தேள் எறிந்தாலே போல
      வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக்
      கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள்
      பட்டைப் பணித்தருளாயே             (6)