முகப்பு
தொடக்கம்
528
தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்
தாள்கள் எம் காலைக் கதுவ
விடத் தேள் எறிந்தாலே போல
வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக்
கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள்
பட்டைப் பணித்தருளாயே (6)