530மாமிமார் மக்களே அல்லோம்
      மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத்
      தொல்லை இராத் துயில்வானே
சேமமேல் அன்று இது சால
      சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே
      குருந்திடைக் கூறை பணியாய்             (8)