532கன்னியரோடு எங்கள் நம்பி
      கரிய பிரான் விளையாட்டைப்
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த
      புதுவையர்கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை
      ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு
      வைகுந்தம் புக்கு இருப்பாரே             (10)