முகப்பு
தொடக்கம்
544
மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி
வண்ணன் மணி-முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என்
சங்கு இழக்கும் வழக்கு உண்டே?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என்
பவள-வாயன் வரக் கூவாய் (1)