544மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி
      வண்ணன் மணி-முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என்
      சங்கு இழக்கும் வழக்கு உண்டே?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
      பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என்
      பவள-வாயன் வரக் கூவாய்            (1)