546மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன்
      இராவணன் மேல் சர-மாரி
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த
      தலைவன் வர எங்கும் காணேன்
போது அலர் காவிற் புதுமணம் நாறப்
      பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என்
      கருமாணிக்கம் வரக் கூவாய்             (3)