முகப்பு
தொடக்கம்
546
மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல் சர-மாரி
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த
தலைவன் வர எங்கும் காணேன்
போது அலர் காவிற் புதுமணம் நாறப்
பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என்
கருமாணிக்கம் வரக் கூவாய் (3)