547என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
      இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
      தோணி பெறாது உழல்கின்றேன்
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
      நீயும் அறிதி குயிலே
பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப்
      புண்ணியனை வரக் கூவாய்             (4)