549எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும்
      இருடீகேசன் வலி செய்ய
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும்
      முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை
      கொள்ளும் இளங் குயிலே என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில்
      தலை அல்லால் கைம்மாறு இலேனே             (6)