553அன்று உலகம் அளந்தானை உகந்து
      அடிமைக்கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை
      நலியும் முறைமை அறியேன்
என்றும் இக் காவில் இருந்திருந்து என்னைத்
      ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல்
      இங்குத்தை நின்றும் துரப்பன்             (10)