முகப்பு
தொடக்கம்
553
அன்று உலகம் அளந்தானை உகந்து
அடிமைக்கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை
நலியும் முறைமை அறியேன்
என்றும் இக் காவில் இருந்திருந்து என்னைத்
ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன் (10)