576விண் நீல மேலாப்பு
      விரித்தாற்போல் மேகங்காள்
தெண் நீர் பாய் வேங்கடத்து என்
      திருமாலும் போந்தானே?
கண்ணீர்கள் முலைக்குவட்டிற்
      துளி சோரச் சோர்வேனைப்
பெண் நீர்மை ஈடழிக்கும்
      இது தமக்கு ஓர் பெருமையே?              (1)