580வான் கொண்டு கிளர்ந்து எழுந்த
      மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத்
      திரண்டு ஏறிப் பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள்-உகிரால்
      இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி-வளைகள்
      தருமாகிற் சாற்றுமினே              (5)