584மத யானை போல் எழுந்த
      மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
      பாம்பு-அணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தான் ஆவான்
      கருதாது ஓர் பெண்-கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
      வையகத்தார் மதியாரே?             (9)