முகப்பு
தொடக்கம்
584
மத யானை போல் எழுந்த
மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
பாம்பு-அணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தான் ஆவான்
கருதாது ஓர் பெண்-கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
வையகத்தார் மதியாரே? (9)