585நாகத்தின் அணையானை
      நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக்கோன்
      விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத
      புதுவையர்கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார்
      அவர் அடியார் ஆகுவரே             (10)