587போர்க்களிறு பொரும்
      மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும்
      தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் பிடாக்கள் நின்று
      கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கு இடுகோ? தோழீ
      அவன் தார் செய்த பூசலையே             (2)