முகப்பு
தொடக்கம்
590
துங்க மலர்ப் பொழில் சூழ்
திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கண் கருமுகிலின்
திருவுருப் போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்
தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்
தங்கு செந்தாமரைகாள்
எனக்கு ஓர் சரண் சாற்றுமினே (5)