594கோங்கு அலரும் பொழில்
      மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்
தூங்கு பொன் மாலைகளோடு
      உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து
      மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
சார்ங்க வில் நாண்-ஒலியும்
      தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ?             (9)